தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல் விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகார்களுக்கு விளக்கமளிக்கும்படி பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோருக்குத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஏப்ரல் 29-ம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
புதுடில்லி: இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 89 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடக்கிறது. இதையடுத்து, அத்தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.

லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்கும் நிலையில், முதல்கட்ட ஓட்டுப்பதிவு கடந்த 19ம் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதில் தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 102 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் 65.50 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. பல்வேறு மாநிலங்களில் வெயில் காரணமாக ஓட்டு விழுக்காடு குறைந்ததாகக் கூறப்பட்டது.


கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகள் உட்பட, கர்நாடகாவில் 14; ராஜஸ்தானில் 13; மஹாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசத்தில் எட்டு; மத்திய பிரதேசத்தில் ஏழு; அசாம் மற்றும் பீஹாரில் ஐந்து; சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்கத்தில் மூன்று; மணிப்பூர், திரிபுரா, ஜம்மு - காஷ்மீரில் தலா ஒரு தொகுதிகளுக்கு இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது.

இதற்காக அந்தந்த மாவட்டங்களிலிருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் மற்றும் மூலப் பொருள்களைப் பிரித்து அனுப்பும் பணிகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முனைப்பு காட்டி வருகின்றனர். வாகனங்கள் செல்ல முடியாத வடகிழக்கு பகுதிகளுக்கும் பிற இடங்களுக்கும் ஹெலிகாப்டர் மூலம் வாக்குப்பதிவுக்குத் தேவையான பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது.
புதுடெல்லி: இந்தியாவின் 75 ஆண்டு கால பொதுத் தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக அளவிலான ரொக்கமும் பொருள்களும் கைப்பற்றப்பட்டதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து பிரசார நடவடிக்கைகளுக்கு அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தின் இணையத்தளத்திற்கு 73,000க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ), அமலாக்கத் துறை போன்ற அரசு அமைப்புகள் வரிசையில் இப்போது தேர்தல் ஆணையத்தையும் பாரதிய ஜனதா கட்சி பயன்படுத்தி வருகிறது என்று டெல்லி அமைச்சர் அதிஷி மார்லேனா தெரிவித்துள்ளார்.